சிவாஜியின் அங்கவை சங்கவை ஒரு எழுத்தாளனின் வெற்றியை குறிக்கிறது
என்ன் இது எல்லோரும் திட்டும் விஷயம் எப்படி ஒருவனின் வெற்றியாயிற்று. ஆம் முரண்பாட்டை பட்டென்று சொல்லும் வெற்றி.
ஒரு தமிழ் பெண் எப்படி இருக்க வேண்டுமாம்?
ஒரு அழகான பெண் என்று சொல்லப் படும் உயரம் மற்றும் அளவான அங்க அமைப்புக ளோடு, வெள்ளையான, களையான முகத்தோடு இருக்க வேண்டும்.
தாவணி அணிந்து (அல்லது புடவை அணிந்து - கலாசார உடை அடையாளம்), குனிந்த தலை நிமிராமல் ( பின்னால் சுற்றும் ஜொள்கள் அறியாமல்) கோவிலுக்குச் சென்று ( அடக்கத்தின் அடையாளம்), வீட்டில் கூட அந்த அடையாளம் மாறாமல் ( சவுகரியம் கருதி Nighty எல்லாம் அணியாமல்), பாடத் தெரிந்து, ஆடத் தெரிந்து(கர்நாடக இசை. தமிழ்க் கலையோ Rap -ஓ அல்ல) பின் வேலைக்கும் போகத் தெரிந்து(புடவை அணிந்து) இப்படியாக இருத்தல் வேண்டும்.
நாயகனாகிய இளைஞன் (?) வந்து காதல் விண்ணப்பம் செய்யும் போது கண்டதும் காதல் என்று பின்னால் போய்விடாமல் ( ஆறுதலான விஷயம் தான்) ஆனால் கறுப்பு என்ற காரணத்தால் மறுத்து விடாமல் கறுப்புத் தான் எனக்குப் பிடித்த கலரு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதே இளைஞன் தமிழ் பெண்ணை விரும்பும் இளைஞன் அந்த தமிழ் பெண் சிவாஜி படத்தில் வருவது போல் ஒரு கடைக் கோடி கிராமத்துப் பெண்ணை நினைவுறுத்தும் விதமாக, உயரம் மற்றும் அங்க அமைப்புகள் மேற்கூறிய விதத்தில் பொருந்தாமல் இருந்தால் அவள் எல்லாம் தான் திருமணம் செய்யும் தகுதிக்கு உரியவள் அல்ல (Chudidhar அணிந்து வந்தாலும்) என்பது மட்டும் அல்ல அந்த திசைக்கே ஒரு கும்பிடு என்று சொல்லும் முரண்பாட்டை துணிந்து சொல்லிய வெற்றி.
இந்த செய்தியை தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினி யை வைத்து, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை வைத்து, சின்னக் கலைவாணர் விவேக்கை வைத்து, தமிழ் நெஞ்சங்களில் ஒரு நல்ல பட்டிமன்ற பேச்சாளர் என்ற பெயர் எடுத்த சாலமன் பாப்பையா வைத்து ,
அழகுக் கதாநாயகியின் எதிர் வீட்டிலேயே குடி வைத்து நாயகனை அங்கே பழக விட்டு இங்கே பெண் எடுக்க வைத்த துணிச்சல்.
ஒவ்வொரு தமிழனின் கயையும் வைத்து அவன் கண்ணைக் குத்திய துணிச்சல்.
ஒரு தமிழ் பெண்ணை அடையாளம் காட்ட வெளி மாநில வெள்ளைப் பெண்ணை வைத்து சொல்லத் தலைப் பட்ட இயக்குநரின் வியாபார மோகத்தையும் ( காவிரி ஆறு பாட்டில் தமிழ் கிராமங்களை சொல்லத் தலைப்பட்ட இயக்குநர் அதை மலையாள நயனை வைத்தது - அவர் உடுத்தியிருக்கும் உடை தமிழ் நாட்டில் எங்கு போடுகிறார்கள், பின் தமிழ் பெண் நாயகி பாடல்களில் மட்டும் Hollywood பெண் ஆகி விடும் வியாபார தந்திரம்),
தான் ஒரு கறுப்பழகன் என்று வெள்ளை நாயகிகள் கொண்டு பல படங்களில் சொல்லத் தலைப்பட்ட ரஜினியின் மோகம்,
தமிழ் தமிழ் என்று கூவும் நாம் தமிழ் அல்லாத கதாநாயகிகளையே இங்கு பெறுவாரியாக ஆதரிக்கும் விருந்தோம்பலையும்
நகைச்சுவை காட்சிக்குள் வைத்து சொல்லிய துணிச்சல்.
ராதிகாவையும், த்ரிஷாவையும் வெள்ளை அடித்தே தான் நாம் பார்த்து வருகிறோம்.
வெளிநட்டுப் பெண்கள் வாழ்க்கை முறை பார்த்து வெலெ வெலத்து தமிழ் நாட்டில் வந்து பெண் எடுக்கும் நம் இளைஞர்கள் அந்த 'இரு' பெண்கள் போல் இருப்பவர்களை யா விரும்பி திருமணம் செய்கிறார்கள்? இல்லை, இங்கேயே வாழும் நாம் தான் நம் பிள்ளைகளுக்கு அப்படி திருமணம் செய்கிறோமா?
தமிழ் பெயர் நல்லா தான் இருக்கு. ஆனால் தமிழ் செல்வி என்ற பெயர் ரொம்ப பழமையா இல்லை. அங்கவை சங்கவை எல்லாம் ரொம்ப பழசா இருக்கே என்று நினக்கும் நம் தமிழ் நெஞ்சங்களை ஒரு குத்து குத்தி இருக்கும் துணிச்சல்.
கிடைத்த இடைவெளியில் தன் 'நச்' சிறு கதையை எழுதி விட்ட கதாசிரியரின் துணிச்சல்.
இது தமிழ் நாட்டின் முரண்பாட்டை வெளிப்படுத்தும் துணிச்சல்.
கதாசிரியரை, சாலமன் பாப்பையாவை திட்டுவது விடுத்து, உண்மை என்ன வென்று பார்க்க வேண்டும்.
கறுப்புக் காத நாயகர்கள் எங்கிருந்து வந்தாலும் நம் பக்கத்து விட்டு பிள்ளை போல் இருப்பதாக ஏற்கும் நாம் நம் நாயகிகள் மட்டும் வெள்ளை பொம்மை போலிருக்க வேண்டும் என்று நினைப்பதை நிறுத்த வேண்டும்.
திருமணத்திற்குப் பெண் எடுக்கும் போது பெண் நிறம் குறைவாக இருந்தால் பொருளாதாரம்
கொண்டு சமன் படுத்தி விட்டால் சரி என்று நினைப்பதை விட்டு விட வேண்டும்.
இன்னொன்று கூட செய்யலாம். நிற மாற்றம் செய்யாமல் நம் தமிழ் பெண்களை படங்களில் நாயகிகள் ஆகக் காட்ட துணிந்தால் வரி குறைப்பு செய்யப் படும் என்று ஊக்கம் கூடக் கொடுக்கலாம்.
கனி மொழி கொஞ்சம் அப்பா கிட்ட சொல்லிடுங்க.

